Loading...

    மானினம் அல்ல பெண்

    வேடிக்கை மனிதரைப் போல் சாய்ந்திடாது

    சாதிக்கப் பிறந்த தீரமிக்கப் பெண்ணே !

    பரந்த இப்புவியில் நல்லறங்கள் விதைத்திட

    சிரம் மேல் சுமையுடன் களமிறங்கிடு!

    வயிற்றுப்பசிப் போக்கும் விவசாயம் முதல்

    விரல்நுனியில் பம்பரமாய் சுழலும் பெண்ணே!

    அறிவுப்பசித் தீர்க்கும் அறிவியல் ஆராய்ச்சிகளிலும்

    பொறுப்பேற்கும் வல்லுனராக உன்னை முன்னிறுத்திடு !

    அடிமைத்தனத்தின் தோல்பாவையாய் அடங்கிவிடாதே 

    துடித்தெழும் வேங்கையாக வலுவேற்றிடு பெண்ணே !

    நரைக்கூடியப் பின் முடங்கி மூலையில்  கிடக்க 

    திரைமறைவில் வாழ்வதல்ல வாழ்க்கை அறிந்திடு!

    அச்சம் தவிர்த்து நிமிர்ந்த நன்னடையுடன் 

    தெளிவான பேச்சில் உலகை அதிரச்செய்வாய்!

    பால்கணக்கும் மோர்க்கணக்கும் பார்த்தது போதும்

    பாலியல் தொல்லைகளைத் தோலுரித்துத் தொங்கவிடு !

    கருச்சுமக்கும் இயந்திரமோ போகப்பொருளோ அல்ல நீ

    சொடுக்கியின் வலையில் மீனாய் விழுந்திட !

    உன்னுள் ஓருயிரைச் சுமக்கும் ஆற்றலுடன்

    உன்திறன் ஆராய்ந்து செயல்படத் தொடங்கிடு !

    முண்டாசுக்கவி கண்ட புதுமைப்பெண்ணாக

    மண்ணில் வீறுகொண்டு எழுந்துவா பெண்ணே!

    வேட்டையாடப்படும்  மானினம் அல்ல பெண்

    சாட்டையடிக் கொண்டு சமூகத்திற்கு அறிவித்துவிடு !

    முனைவர் தனலட்சுமி பரமசிவம்

    திருப்பதிசாரம்

    கன்னியாகுமரி மாவட்டம், இந்தியா.

    Leave a Reply

    Your email address will not be published.

    You may use these <abbr title="HyperText Markup Language">html</abbr> tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

    *

    Pin It on Pinterest

    Share This