Loading...

    பயணச் சீட்டு

    திரும்புதலுக்கான

    தேதியிடப்படாத

    பயணச் சீட்டு

    வேண்டாமலே

    அளிக்கப்பட்ட ஒன்று.

    இன்றோ

    நாளையோ

    அடுத்த நொடியோ;

    திரும்புதலென்பது

    மெய்யின்றி

    துணையின்றி

    துரும்புமின்றி

    வந்த வழியில்

    கூட அல்லாது

    மாற்றுப் பாதையில்

    சடுதியில் செலுத்திடும்

    மர்மப் பயணம்.

    இருந்தும் கழுதைச்

    சுமையாய்

    ஆயிரம் பொதிகள்;

    உறவாலும்,

    பொருளாலும்,

    உணர்வுகளாலும்;

    உயிர்மெய் நோக

    என்பு தேய

    கட்டி இழுத்து

    எதற்கித்தனை

    அசெளகர்யங்கள்?

    அவ்வப்போது

    ஆங்காங்கே

    சுமைகளை பத்திரமாக

    இறக்கிச் சென்றால்

    இறகுப் பயணம்

    சுகமாகுமே!

    சாத்தியமாகுமா?

                                      ~நளினி சுந்தரராஜன்.

    Leave a Reply

    Your email address will not be published.

    You may use these <abbr title="HyperText Markup Language">html</abbr> tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

    *

    Pin It on Pinterest

    Share This