Loading...

    தேன்சாரல்

    இளமையிலே காதல்வரும்

    முதுமையிலும் தொடர்ந்து வரும்

    மனதினிலே நினைத்து விட்டால்

    மயக்கமூட்டும் தேன்சாரல் விழும்

    மலரைச்சுற்றி வந்தக்காலத்தில்

    மதுக்குடமாய் அவள் நினைவிருக்கும்

    கனவினிலே தேன்சாரல் தெளிக்கும்

    காட்சி விரிப்பில் அது இனிக்கும்

    புத்தகம் தொடும்போதும்

    புத்தாக்கம் செய்யும் போதும்

    கற்றைக்குழலியின் நினைவுவரும்

    காற்றோடு அவள்பேசிய

    தெள்ளு தமிழ் சாரல் விழும்

    குற்றால அருவியிலே

    கொவ்வை மலர் சிரிப்பினிலே

    வண்டு வந்து அமர்ந்து

    வாலிபத்தைக் கரைக்கையிலே

    பட்டுத்தெறித்த முத்தத்துளியிலே

    பதறிவிழுந்தத் தேனடையாலே

    சிதறிக் கலந்ததுவே

    அதுஅவள் உவகையில்

    சிதறிக்கலந்ததுவே

    என் சிந்தையில் நாளும்

    வந்தமரும் சித்தனவாசலின்

    ஓவியமே என் மனதை மயக்கும்

    குற்றால மலையின் தேன்சாரல் மழையே

    அவள் உவகையில் உண்டு மகிழ்ந்து

    கண்டு தெளியாத வண்டினமே

    அவள் நினைவில்நித்தம்

    குளிக்கும் தேன்சாரல்மழையே

    அய்யோ… அது தேன்சாரல் மழையே

    செ.புனிதஜோதி

    Leave a Reply

    Your email address will not be published.

    You may use these <abbr title="HyperText Markup Language">html</abbr> tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

    *

    Pin It on Pinterest

    Share This