manju – www.worldpoetess.com
    Loading...

    பெற்ற துயரது அன்னைக்கெனினும்..
    பெருமைக்கண்ணீர் அவருக்கன்றோ??
    உற்ற மகிழ்வதை வெளிக்காட்டாது..
    உறவுகளின் முன் அவர் ஊமையன்றோ?

    ஊட்டி வளர்ப்பவள் தாயேயெனினும்..
    உழைத்துனை உயர்த்துதல் அவரே யன்றோ?
    காட்டிடாமல் தன் அன்பொளித்தாலும்..
    கழை ஓசையாய் அது வெளிப்பட்டிடுமே!

    தோளுக்குயர்ந்ததும் தோழனாவார்!
    தாங்கிய கரம் கொண்டு தழுவிடுவார்!!
    சாளரக் காற்றென சத்தமின்றி..
    சங்கீதமாய் அவர் இனித்திடுவார்!

    விந்தையென்றாகி வியப்புதரும்..
    தந்தையென்றான தவமன்றோ!!

    பல நாள் வலிகளின்
    பரிசு இது!!
    பலியான உயிர்கள் தந்த
    பாடம் இது!!

    முழுமையில்லை என்றாலும்
    முதன்மை இது!!
    முற்றுப்புள்ளி வைக்க
    முதல் படி இது!!

    தொற்றினை ஒழிக்க
    தோதாக வந்ததிது!!
    தொடர்ந்திடாமல் தடுக்க
    தோழனென ஆனதிது!!

    ஊசி வடிவில் வந்திட்ட
    உயிர்காப்பு இது!!
    உலகினை உயர்த்திடவே
    உறுதி ஏற்றதிது!!

    நிரந்தரம் வரும் வரை
    நிம்மதி இது!!
    நிராகரிக்காதிருந்தால்
    நிவர்த்தி இது!!
    அன்புடன்
    மஞ்சு

    எழுத்தாலே ஏற்றத்தை
    எடுத்துரைத்த எழுச்சிக் கவி-தன்
    பழுத்த பகுத்தறிவால் …
    பாரதத்தாய் பாதம் தொட்டான்!!

    விடுதலை வித்திட்ட..
    விந்தைக் கவிஞனவன்
    சுடு நீராய் சுட்டெழுந்தான்..
    சுதந்திரக் கவிகளாளே!!

    பாஞ்சாலி சபதத்தால்..
    பாரதம் புகட்டிட்டான்!!
    மாஞ்சோலைக் குயிலியவள்..
    மனங்கவர் காதல் சொன்னான்!!

    கண்ணனைப் பாடியவன்…
    களிப்புறச் செய்திட்டான்!!
    பெண்ணியமும் போற்றி பல..
    பெருமைகள் சேர்த்திட்டான்!!

    சாத்திரம் மட்டுமின்றி..
    சகலமும் அறிந்தவனாம்!!- புதிய
    ஆத்திச் சூடியும் தந்து..
    அறிவுரைகள் அளித்திட்டான்!!

    முண்டாசுக் கவிஞனை நாம்
    முழுதாய்ப் படித்திட்டால்..
    கொண்டாடும் அறிவுடனே..
    கோடி நன்மை கொண்டிடலாம்!!
    அன்புடன்
    மஞ்சு

    Pin It on Pinterest