என் தோழன் நீ:
உன் வழிச் சுவடு
தேடும் என் பாதம்;
முட்கள் நீ தாங்கி
விட்டுச் செல்லும் மென் தடம்;
ஒரு நொடியில் அடி எடுக்கும்
என் மனம்,
நின் துணை மட்டும்
நம்பித் தொடரும்
அனுதினம்!
~நளினி சுந்தரராஜன்.
என் தோழன் நீ:
உன் வழிச் சுவடு
தேடும் என் பாதம்;
முட்கள் நீ தாங்கி
விட்டுச் செல்லும் மென் தடம்;
ஒரு நொடியில் அடி எடுக்கும்
என் மனம்,
நின் துணை மட்டும்
நம்பித் தொடரும்
அனுதினம்!
~நளினி சுந்தரராஜன்.
உயிர் வளி நின்ற
ஓருயிர் விட்டுச் சென்ற
நத்தைக் கூடொன்று
கிடைத்ததென்
கையில்;
உயிரினழகு
இன்னமும்
வட்ட வரிகளாய்
உதிர்ந்த சருகின்
எடையில்;
உடன் எடுத்துச் செல்ல
ஒர் உந்துதல்;
சென்ற உயிர்
திரும்பிடில்
உயிரற்ற கூடை
உயிரோடிணைக்கும்
கனவில்;
உணர்வின் மிகுதியில்
ஐவிரல் அணைப்பில்
காகித மெத்தையில்
பதமாய் சுருட்டுகையில்
நொறுங்கியது;
அச் சிறு ஓடும்,
என் இதயமும்,
சில்லுகளில்;
உதகம்
பிரிய மறுக்கும்
உயிரற்ற அக்கூடு
உணர்த்தியது,
உயிர் பிரிந்திடினும்
மெய் வேறிடம்
செல்லாது;
ஆங்கே
பதை படிவமாகுமேயன்றி
பற்றும் வேற்றுக் கரம்
ஒட்டாது!
~நளினி.
முக மலர்ச்சி திரையிடும்
மனதின் வாட்டத்தை
குறிப்பறிவது;
வற்றிய பொழுதுகளில்
இரு துளி கண்ணீர்
கடன் தருவது;
தேற்ற அணைத்து
ஆசுவாசிக்க ஓரடியும்
கொடுப்பது;
பிணக்கம் சமாதானிக்க
முதல் சொல்
உதிர்ப்பது;
தனிமை விரும்புகையில்
உடனருகே தனித்துக்
காத்திருப்பது;
எதுவுமில்லாத போது
யாதுமாகி நின்று
கரை சேர்ப்பது;
போவென்றால் வாவென்றும்
வாவென்றால் வந்தேனென்றும்
புரிதல் கொள்வது;
விழி மூடும் முன்
காணும்
இறுதி பிம்பமாயிருப்பது,
ஆகச் சிறந்த வரம்!
~நளினி.