Loading...

    நட்பென்பது

    முக மலர்ச்சி திரையிடும்

    மனதின் வாட்டத்தை

    குறிப்பறிவது;

     வற்றிய பொழுதுகளில்

    இரு துளி கண்ணீர்

    கடன் தருவது;

     தேற்ற அணைத்து

    ஆசுவாசிக்க ஓரடியும்

    கொடுப்பது;

     பிணக்கம் சமாதானிக்க

    முதல் சொல்

    உதிர்ப்பது;

     தனிமை விரும்புகையில்

    உடனருகே தனித்துக்

    காத்திருப்பது;

     எதுவுமில்லாத போது

    யாதுமாகி நின்று

    கரை சேர்ப்பது;

     போவென்றால் வாவென்றும்

    வாவென்றால் வந்தேனென்றும்

    புரிதல் கொள்வது;

    விழி மூடும் முன்

    காணும்

    இறுதி பிம்பமாயிருப்பது,

     ஆகச் சிறந்த வரம்!

                                                         ~நளினி.

    Leave a Reply

    Your email address will not be published.

    You may use these <abbr title="HyperText Markup Language">html</abbr> tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

    *

    Pin It on Pinterest

    Share This