Loading...

    கூடொன்று கண்டேன்

    உயிர் வளி நின்ற 

    ஓருயிர் விட்டுச் சென்ற

    நத்தைக் கூடொன்று

    கிடைத்ததென் 

    கையில்;

    உயிரினழகு

    இன்னமும்

    வட்ட வரிகளாய்

    உதிர்ந்த சருகின் 

    எடையில்;

    உடன் எடுத்துச் செல்ல

    ஒர் உந்துதல்;

    சென்ற உயிர்

    திரும்பிடில்

    உயிரற்ற கூடை

    உயிரோடிணைக்கும் 

    கனவில்;

    உணர்வின் மிகுதியில்

    ஐவிரல் அணைப்பில்

    காகித மெத்தையில்

    பதமாய் சுருட்டுகையில்

    நொறுங்கியது;

     

    அச் சிறு ஓடும்,

    என் இதயமும்,

    சில்லுகளில்;

    உதகம் 

    பிரிய மறுக்கும்

    உயிரற்ற அக்கூடு

    உணர்த்தியது,

    உயிர் பிரிந்திடினும்

    மெய் வேறிடம்

    செல்லாது;

     

    ஆங்கே

    பதை படிவமாகுமேயன்றி

    பற்றும் வேற்றுக் கரம் 

    ஒட்டாது!                                             

                                                         ~நளினி.

    Leave a Reply

    Your email address will not be published.

    You may use these <abbr title="HyperText Markup Language">html</abbr> tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

    *

    Pin It on Pinterest

    Share This